99 : 1
إِذَا زُلْزِلَتِ ٱلْأَرْضُ زِلْزَالَهَا
வேதக்காரர்கள்; இன்னும், இணைவைப்பவர்கள் ஆகிய நிராகரிப்பாளர்கள் தங்களிடம் தெளிவான அத்தாட்சி வருகின்ற வரை (இறைவனின் தூதர் வந்தால், அவரைப் பின்பற்றுவோம் என்ற கொள்கையிலிருந்து) விலகியவர்களாக இருக்கவில்லை.
99 : 2
وَأَخْرَجَتِ ٱلْأَرْضُ أَثْقَالَهَا
இன்னும், அந்த பூமி அதன் சுமைகளை எறிந்துவிடும்போது,
99 : 3
وَقَالَ ٱلْإِنسَـٰنُ مَا لَهَا
இன்னும், மனிதன் இதற்கென்ன நேர்ந்தது எனக் கூறுவான்.
99 : 4
يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا
அந்நாளில் அ(ந்த பூமியான)து தனது செய்திகளை அறிவிக்கும்.
99 : 5
بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا
அதாவது, உம் இறைவன் அதற்கு (இவ்வாறு) கட்டளையிட்டான் என்று.
99 : 6
يَوْمَئِذٍ يَصْدُرُ ٱلنَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا۟ أَعْمَـٰلَهُمْ
அந்நாளில் மக்கள் பல பிரிவுகளாக பிரிந்து புறப்பட்டு வருவார்கள். அவர்களின் செயல்களை அவர்கள் காண்பிக்கப்படுவதற்காக.
99 : 7
فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُۥ
ஆக, யார் ஓர் அணுவளவு (ஒரு சிறிய எறும்பின் அளவு) நன்மை செய்வாரோ, அவர் (அங்கு) அதைப் பார்ப்பார்.
99 : 8
وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُۥ
இன்னும், யார் ஓர் அணுவளவு (ஒரு சிறிய எறும்பின் அளவு) தீமை செய்வாரோ, அவர் (அங்கு) அதைப் பார்ப்பார்.