90 : 1
لَآ أُقْسِمُ بِهَـٰذَا ٱلْبَلَدِ
விடியற் காலையின் மீது சத்தியமாக!
90 : 2
وَأَنتَ حِلٌّۢ بِهَـٰذَا ٱلْبَلَدِ
இன்னும், (நபியே!) நீர் இந்த நகரத்தில் (எதிரிகளைத் தண்டிப்பதற்கு) அனுமதிக்கப்பட்டு இருக்கிறீர்.
90 : 3
وَوَالِدٍ وَمَا وَلَدَ
தந்தை மீதும், அவர் பெற்றெடுத்தவர்கள் மீதும் சத்தியமாக!
90 : 4
لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَـٰنَ فِى كَبَدٍ
திட்டவட்டமாக, மனிதனை சிரமத்தில் (சிக்கிக் கொள்பவனாகவே) படைத்தோம்.
90 : 5
أَيَحْسَبُ أَن لَّن يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌ
தன்மீது ஒருவனும் ஆற்றல் பெறவே மாட்டான் என்று (அவன்) எண்ணுகிறானா?
90 : 6
يَقُولُ أَهْلَكْتُ مَالًا لُّبَدًا
அதிகமான செல்வத்தை நான் அழித்தேன் என்று (அவன் பெருமையாக) கூறுகிறான்.
90 : 7
أَيَحْسَبُ أَن لَّمْ يَرَهُۥٓ أَحَدٌ
அவனை ஒருவனும் பார்க்கவில்லை என்று எண்ணுகிறானா?
90 : 8
أَلَمْ نَجْعَل لَّهُۥ عَيْنَيْنِ
இரு கண்களை அவனுக்கு நாம் ஆக்கவில்லையா?
90 : 9
وَلِسَانًا وَشَفَتَيْنِ
இன்னும், ஒரு நாவையும், இரு உதடுகளையும் (அவனுக்கு நாம் படைக்கவில்லையா?)
90 : 10
وَهَدَيْنَـٰهُ ٱلنَّجْدَيْنِ
இன்னும், இரு பாதைகளை அவனுக்கு வழிகாட்டினோம்.
90 : 11
فَلَا ٱقْتَحَمَ ٱلْعَقَبَةَ
ஆக, அவன் அகபாவைக் கடக்கவில்லை.
90 : 12
وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْعَقَبَةُ
(நபியே!) அகபா என்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
90 : 13
فَكُّ رَقَبَةٍ
(அது,) ஓர் அடிமையை விடுதலை செய்தல்,
90 : 14
أَوْ إِطْعَـٰمٌ فِى يَوْمٍ ذِى مَسْغَبَةٍ
அல்லது, கடுமையான பசியுடைய நாளில் உணவளித்தல்,
90 : 15
يَتِيمًا ذَا مَقْرَبَةٍ
(யாருக்கு என்றால்) உறவினரான ஓர் அனாதைக்கு,
90 : 16
أَوْ مِسْكِينًا ذَا مَتْرَبَةٍ
அல்லது, மிக வறியவரான ஓர் ஏழைக்கு உணவளித்தல் (அகபாவை கடப்பதாகும்).
90 : 17
ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَتَوَاصَوْا۟ بِٱلصَّبْرِ وَتَوَاصَوْا۟ بِٱلْمَرْحَمَةِ
(இத்தகைய புண்ணியத்தை செய்த) பிறகு, (அத்துடன்) அவர் நம்பிக்கையைக் கொண்டவர்களிலும், பொறுமையைக் கொண்டு உபதேசித்துக் கொண்டவர்களிலும், கருணையைக் கொண்டு உபதேசித்துக் கொண்டவர்களிலும் ஆகிவிட வேண்டும்.
90 : 18
أُو۟لَـٰٓئِكَ أَصْحَـٰبُ ٱلْمَيْمَنَةِ
இ(த்தகைய நன்மைகளை செய்த)வர்கள் வலப்பக்கமுடையவர்கள் (-சொர்க்க வாசிகள்) ஆவார்கள்,
90 : 19
وَٱلَّذِينَ كَفَرُوا۟ بِـَٔايَـٰتِنَا هُمْ أَصْحَـٰبُ ٱلْمَشْـَٔمَةِ
இன்னும், எவர்கள் நம் வசனங்களை நிராகரித்தார்களோ அவர்கள் இடப்பக்கமுடையவர்கள் (நரகவாசிகள்) ஆவார்கள்.
90 : 20
عَلَيْهِمْ نَارٌ مُّؤْصَدَةٌۢ
(அவர்கள் நரகத்தில் தள்ளப்பட்டப்பின் அந்த) நரகம் அவர்கள் மீது மூடப்படும். (அதற்கு வாசல்களோ ஜன்னல்களோ இருக்காது.)